Breaking

Tuesday, October 1, 2019

குருப்பெயர்ச்சி பலன்கள் 2019- மீனம் ராசி

குருப்பெயர்ச்சி:
                             மங்களகரமான விகாரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தில் ஐப்பசி மாதம் 11ஆம் (28.10.2019) தேதி குருபகவான் பிரதமை திதியில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் அதிகாலை 03.14 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
மங்களகரமான விகாரி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தில் ஐப்பசி மாதம் 18ஆம் (04.11.2019) தேதி குருபகவான் நவமி திதியில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் விடியற்காலை 05.17 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.


மீன ராசி பொதுப்பலன்:
குருபகவான் வீட்டில் மீனம் ராசிக்காரர்கள் ஜனனமாவதால் இவர்கள் எப்பொழுதும் தெய்வ சிந்தனையுடனும், தர்மத்திற்கும் நியாயத்திற்கும் கட்டுப்பட்டு வாழ்வார்கள். மேலும் நல்ல கடவுள் நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் உடையவர்கள். மேலும் பரந்த மனப்பான்மையுடையவர்கள். நல்ல சிந்தனையுடையவர்கள். நல்லவற்றைப் பேசியும், நல்லனவற்றை எண்ணியும் வாழ்வார்கள். மற்றவர்கள் கஷ்டங்களைத் தங்கள் கஷ்டம் போல் பாவிப்பார்கள். அந்தக் கஷ்டங்களைப் போக்க தன்னால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்குச் செய்யத் தயங்க மாட்டார்கள்.
அளவுக்கதிகமாக மற்றவர்களை நம்பி இவர்கள் மோசம் அடைவார்கள். இவர்களை உற்றார், உறவினர்கள், நண்பர்களுள் ஏமாற்றுவார்கள். அதனால் மிகவும் வருத்தப்படுவார்கள்.
அளவுக்கதிமாக கனவு காண்பதால் எப்பொழுதும் ஒரு எதிர்பார்ப்பு என்பது வாழ்க்கையில் இருந்து கொண்டேயிருக்கும். 
குருப்பெயர்ச்சி பலன்கள்:
மீன ராசி நேயர்களே, இது வரை 9-ம் இடத்தில் இருந்து வந்த குரு பகவான் குருப்பெயர்ச்சிக்கு பிறகு 10-ம் இடத்திற்கு செல்கிறார்.உங்கள் ராசிக்கு குருபகவான் ராசி அதிபதியாகவும், பத்தாம் அதிபதியாகவும் வருவார்.
மீன ராசிக்கு இதுநாள் வரை ஒன்பதாம் இடத்தில் இருந்து நன்மைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்த குருபகவான் தற்போது பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு மாற்றம் அடைகிறார்.
பொதுவாக பத்தில் குரு வந்தால் பதவியைப் பறிக்கும் என்பது பழமொழி.
10-இடத்து குரு நன்மை செய்ய மாட்டார் என்பது ஒரு பொதுவான கருத்து. இருப்பினும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களுக்கு நடக்க வேண்டிய பல நல்ல விஷயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கும். கடந்த இரண்டு வருடங்களாக சனிபகவான் உங்கள் ராசிக்கு 10ஆம் இடத்தில் இருந்து பல பிரச்சனைகள் தந்திருப்பார். இனிவரும் சனிப்பெயர்ச்சி பிறகு 10ஆம் இடத்தில் இருந்து விலகி பல நற்பலன்களை தருவார்.
குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும். பொருளாதாரத்தில் கணிசமான வளர்ச்சி ஏற்படும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சொன்ன சொல்லை காப்பாற்ற முடியும். குடும்பத்தில் சந்தோஷமான சூழல் இருக்கும்.  புது பொருள் சேர்க்கை உண்டாகும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.  குடும்பத்தில் இருப்பவர்களால் சிறு சிறு பிரச்சனைகள் வரலாம். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் ஒன்றை வாங்குவீர்கள். கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். மேலும் கொடுத்த கடனை திரும்ப பெறுவது கடினம். எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யுங்கள். முக்கிய வேலைகளை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.  கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். உற்றார், உறவினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும். உடல் நலம் சீராகும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். சமுதாயத்தில் நல்ல செல்வாக்கு உள்ளவர்களாக திகழ முடியும். வருமானம் பல வழிகளில் வந்து சேரும். வரும் எதிர்ப்புகள் தானாக விலகும். ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள்.  குல தெய்வ வழிபாடு தாமதன்றி நிறைவேற்ற முடியும். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது பெரியோர் அறிவுரை கேட்டு நடப்பது அவசியமாகிறது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நன்மை தரும்.தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் வரும். தொழில், வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். தொழிலில் இது நாள் வரை இருந்த இடர்பாடுகள் நீங்கும். சொந்தத் தொழிலை அளவோடு முதல் போட்டு ஆரம்பிக்கலாம். தொழில் சிறப்படையும்.
மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்ணோடு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். பொருளாதாரம் சிறந்து விளங்கும். பணப்பற்றாக்குறை இருக்காது. சிலருக்கு வெளிநாட்டு வேலை யோகமும் உண்டு.
குரு தன்னுடைய 5ம் பார்வையால் இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் இதுநாள் வரை இருந்த பிணக்குகள் நீங்கும். தாராளமான பணவரவு உண்டு.
ஏழாம் பார்வையால் நான்காம் இடத்தைப் பார்ப்பதால் உடல் நலமாக இருக்கும். வீடு மனை, வண்டி, வாகனம் வாங்க கூடிய காலகட்டங்கள் இது.
9-ஆம் பார்வையால் 6-ஆம் இடத்தைப் பார்ப்பதால் விரும்பிய இடத்தில் இருந்து சுபக் கடன்கள் கிடைக்கும். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி ஏமாற்றத்தை போக்கி, ஏற்றத்தைக் பெருக்கி இன்பமாய் வாழ வைக்கும்.
2020 ஆம் ஆண்டு குருபெயர்ச்சி மற்றும் சனிப்பெயர்ச்சி  மீன ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கும்.
அதிர்ஷ்டம்:
எண் : 1,2,3,9,
கிழமை : வியாழன், ஞாயிறு
திசை : வடகிழக்கு
நிறம் : மஞ்சல், சிவப்பு
கல் : புஷ்ப ராகம்
தெய்வம் : தட்சிணாமூர்த்தி
பரிகாரம்:
மீன ராசியை ஆளும் கிரகம் குரு. எனவே மீன ராசிக்காரர்கள் தட்சிணாமூர்த்தியை அன்றாடம் வணங்கி வர, நல்ல பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment