Breaking

Saturday, September 28, 2019

குருப்பெயர்ச்சி பலன்கள் 2019 - மிதுனம் ராசி

குருப்பெயர்ச்சி:
                             மங்களகரமான விகாரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தில் ஐப்பசி மாதம் 11ஆம் (28.10.2019) தேதி குருபகவான் பிரதமை திதியில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் அதிகாலை 03.14 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
மங்களகரமான விகாரி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தில் ஐப்பசி மாதம் 18ஆம் (04.11.2019) தேதி குருபகவான் நவமி திதியில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் விடியற்காலை 05.17 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.



மிதுன ராசி பொதுப்பலன்:
மிதுன ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் ஓடியாடி உழைக்கும் இயல்புடையவர்கள், புதன் என்றாலே சுறுசுறுப்பு என்றுதான் அர்த்தம். எனவே எப்பொழுதும் சுறுசுறுப்புடன் விளங்குவர். மேலும் புதன் என்றால் அழகு அல்லது இளமை என்று இருப்பதால் எப்பொழுதும் கவலையில்லாமல் சிரித்த முகத்துடன் மற்றவர்களுடன்  பேசிப்பழகுவதில் வல்லவர்கள். பலதுறைகளிலும் தங்களது அறிவையையும் ஆற்றலையும் வெளிப்படுத்துவர். நல்ல நேர்மையான எண்ணம் உடையவர்கள். எப்பொழுதும் மாற்றம் என்ற ஒன்றை விரும்புவர். மனது எப்பொழுதும் அலைபாய்ந்து கொண்டேயிருக்கும். எதிலும் நிலையான ஈடுபாடு இல்லாமல் சதா தொழில் அல்லது வேலையை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள்.
எப்பொழுதும் ஏதாவது ஒரு காரியத்தில் ஈடுபட்டு தங்களை சுறுசுறுப்பாக்கிக் கொள்வார்கள். ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்களை செய்வதில் ஆர்வம் உடையவர். பழையவற்றை வெறுத்துப் புதிய விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்துவர். மற்றவர்களுக்காக அதிகம் பாடுபடுவார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளில் ஈடுபட்டு எதிலும் முழுமை அடையமாட்டார்கள். மிகவும் உணர்ச்சி வசப்படுவார்கள். நல்ல பந்த பாசங்களுக்காக ஏங்குவார்கள். அதற்காக நிறையச் செலவு செய்வார்கள்.
புதன் மனதை ஆளும் கிரகமாதலால் ஒரு சிந்தனை செயல் இவற்றிலிருந்து மற்றொரு எண்ணம் செயலுக்கு மாறிக்கொண்டே இருப்பார்கள். நல்ல நகைச்சுவை உணர்வு உடையவர்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடனும் சீரிய சிந்தனையுடனும் விளங்குவர்.
குருப்பெயர்ச்சி பலன்கள்:
மிதுன ராசி நேயர்களே, இது வரை உங்கள் ராசிக்கு 6-ஆம் இடத்தில் இருந்த குருபகவான் குருப்பெயர்ச்சிக்கு பிறகு  7-ம் வீட்டிற்கு செல்கிறார். 7-ம் வீடு குருவிற்கு சிறப்பு வாய்ந்த இடம். கடந்த ஒரு வருட காலமாக சிரமத்தினை சந்தித்து வந்த உங்களுக்கு இந்த குருபெயர்ச்சி மன நிம்மதியை தரும். 6-ம் இடத்தில் இருந்து ஏழாம் இடத்திற்கு வரும் குருபகவான் தனது நேரடி பார்வையை உங்கள் ராசியின் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு அதில் பெரியளவில் வெற்றி பெறுவீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாக பேசுவதை தவிர்த்து இதமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பயணத்தின் போது உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீடு, வாகனம்,வாங்கும் எண்ணம் மேலோங்கும். வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு பல விதத்திலும் உதவி செய்வார். குடும்பத்தில் உறவினர்கள் வருகை இருக்கும். அனுபவபூர்வமான அறிவு திறனை உபயோகித்து எதிலும் வெற்றி காண்பீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிலருக்கு தொலைதூரங்களிலிருந்தும் நல்ல செய்திகள் வரும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் அனைத்தும் குறைந்து சேமிப்பு பெருகும். குடும்பத்தில் வசதிகள் பெருகும். உங்கள் மதிப்பும், மரியாதையும் வெகுவாக உயரும். திருமண காரியம் விரைவில் கைகூடும். தடைப்பட்ட பல சுப காரியம் இனிதே நடைபெறும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவர். குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும். பொருளாதார உயர்வு இருக்கும், மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உடல் உபாதைகள் நீங்கும். உங்களுடைய திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். தடைப்பட்ட காரியங்களையெல்லாம் விரைந்து முடிக்க முடியும். வெளியில் கொடுத்த கடன் கைக்கு திரும்ப வரும். பணவரவும் அதிகரிக்கும். குல தெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும். இழுபறியில் இருந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும்.
அதே நேரத்தில் இன்னும் சில மாதங்களில் அட்டமச்சனி ஆரம்பிக்க உள்ளதால் எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம்.சனியின் ஆதிக்கத்திற்கு முன்பு குருவின் ஆதிக்கம் பெரிய அளவு செல்லுபடி ஆகாது என்பதால்
புதிய முதலீடுகளை மிகக் குறைவான அளவு செய்வதே நல்லது. சிறந்தது.
தொழிலை விரிவாக்கம் செய்ய இது சரியான நேரம் அல்ல.
ஏழாம் இடம் என்பது நண்பர்களைக் குறிக்கும் இடம் என்பதால் நண்பர்களால் உதவி கிடைக்கும்.
அதே நேரத்தில் புது நண்பர்களிடம் கவனமாக இருங்கள். புதிய நண்பர்களின் ஆலோசனையை கேட்பதில் கவனமாக இருங்கள் ஏனென்றால் அட்டமச்சனி ஆரம்பிக்க உள்ளது.
குரு ராசிக்கு ஏழாம் இடத்தில் இருப்பதால் திருமணமாகாதவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும். நீண்ட நாட்களாக பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்றுசேருவார்கள்.
ராசியில் இருந்து இதுவரை எதிர்மறை எண்ணத்தை செயல் படுத்திக் கொண்டிருந்த ராகுவை, குரு இனி பார்ப்பதால் ராகுவின் எதிர்மறை பலன்கள் இருக்காது.
அதிர்ஷ்டம்:
எண் : 5,6,8
நிறம் : பச்சை, வெள்ளை
கிழமை : புதன், வெள்ளி
கல் : மரகதம்
திசை : வடக்கு
தெய்வம் : விஷ்ணு
பரிகாரம்:
மிதுன ராசியை ஆளும் கிரகம் புதன். ஆகவே இந்த புதனின் சக்தியை கூட்டுவதற்கு, மிதுன ராசிக்காரர்கள் ஸ்ரீமன் நாராயணனை வணங்க வேண்டும். இதனால் வாழ்வில் எப்போதும் வெற்றிக் கிட்டும்.

No comments:

Post a Comment