Breaking

Sunday, September 29, 2019

குருப்பெயர்ச்சி பலன்கள் 2019 - கடகம் ராசி

குருப்பெயர்ச்சி:
                             மங்களகரமான விகாரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தில் ஐப்பசி மாதம் 11ஆம் 28.10.2019 தேதி குருபகவான் விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
மங்களகரமான விகாரி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தில் ஐப்பசி மாதம் 18ஆம் 04.11.2019 தேதி குருபகவான்  விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.



கடக ராசி பொதுப்பலன்:
சந்திரனது ராசியில் பிறந்தவர்கள் ஆனதால் நல்ல சிந்தனையும் எண்ணமும் உடையவர்கள். சந்திரன் வளர்ந்து தேயும் கிரகம் ஆகும். மாதத்தில் 15நாள் வளர்ந்து பெளர்ணமியாகவும், 15நாள் தேய்ந்து தேய்பிறையாக அமாவாசையாகவும் மாறுவதால் வாழ்க்கையில் மேடு பள்ளம் நிறைந்ததாக இருக்கும். அதே சமயம் அதீதமான ஞாபக சக்தியையும் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் வாழ்வதையும் இந்த ராசி குறிப்பிடுகிறது. மற்றவர்கள் பேசும் பேச்சுக்களை வெகு எளிதில் கிரகித்துக் கொண்டு அதற்கேற்ப தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் கெட்டிக்காரர்கள் ஆவார்கள். அடிக்கடி உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள்.எப்பொழுதும் புகழ், செல்வம் இவற்றைத் தேடி அலைந்து கொண்டேயிருப்பர்.  தங்கள் காரியத்தில் மட்டுமே கண்ணும் கருத்துமாயிருப்பார்கள். தங்கள் குடும்பத்தை நேசிப்பதிலும் குறிப்பாக தாய், தந்தை தன்னுடைய குடும்பம், வீடு இவற்றை அதிகம் நேசிப்பார்கள்.
குருப்பெயர்ச்சி பலன்கள்:
கடக ராசி நேயர்களே, இது வரை உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருந்த குரு பகவான்  6-ம் வீட்டிற்கு செல்கிறார்.
தற்போது குரு பெயர்ச்சி ஆகியுள்ள இடம் ருண, ரோக, சத்ரு ஸ்தானம் எனப்படும் ஆறாம் இடம் ஆகும்.
6-ம் இடம் மறைவு ஸ்தானம் குரு காரியங்களில் தடங்களை ஏற்படுத்தும்.  திட்டமிட்டு செய்யலாற்றுவதில் பின்னடைவு ஏற்படலாம். அக்கம் பக்கம் இருப்பவர்களுடன் சிறு சிறு சண்டைகள் உண்டாகலாம். பயணங்கள் சாதகமான பலன் தரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் ஏற்படும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். சுப காரியங்களில் இருந்த தடங்கல்கள் நீங்கும். மனக்கவலை நீங்கி தெளிவு உண்டாகும். குடும்பத்தில் இருந்த சிறு சிறு பிரச்சனை சரியாகும். புதிய நபர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையையும் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை நீண்ட நாட்களாக பட்ட கஷ்டங்கள் மறைந்து ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் கூடும். பணம் அதிகமாக வந்தாலும் சுப விரைய செலவுகள் ஏற்படும். விட்டில் திருமண பேச்சு தொடங்கும். குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணை வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பழைய கடன்களால் மனக்கவலை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். புதிய கடனை மேற்கொண்டு வாங்காமல் இருப்பது நல்லது. புதியவர்களை நம்பி எந்த முடிவையும் எடுக்கவேண்டாம். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு, மரியாதையும் கூடும். பண வரவு அதிகரிப்பதால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். வண்டி, வாகனத்தை சீர் செய்வீர்கள். மறைமுக எதிரிகளின் தொல்லை இருக்கும், இருப்பினும் எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்கவும். ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்துக்கொள்ளவும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை தீரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புண்டு. உத்யோகத்தில் அலுவலுக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். தொழில், வியாபாரம் நன்றாகவே நடக்கும். தொழில், வியாபாரத்தில் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. இந்த குருப்பெயர்ச்சி நிறைய செலவுகளையும், வீண் அலைச்சல்களையும் தந்தாலும் வெற்றி பெறுவது உறுதி.
தொழில் செய்பவருக்கு புதிய தொழில் போட்டியாளர்கள் உருவாவார்கள்.
ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சர்க்கரை, ரத்த கொதிப்பு போன்ற நோய் உள்ளவர்கள் முறையான தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.
சிலருக்கு கடன் சார்ந்த வகையில் கோர்ட், கேஸ் என அலைச்சலும் உண்டு.
சொத்துக்கள் விரயம் ஆகும் காலம் என்பதால் கவனம் தேவை
குரு தனுசில் இருந்து 5ஆம் பார்வையாக பத்தாம் இடத்தை பார்ப்பதால் தொழிலில் பிரச்சினை இருக்காது. சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். மேலதிகாரியை அனுசரித்து செல்வது நல்லது.
தன்னுடன் பணிபுரியும் சக பணியாளர்களிடமும் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது.
வேலை சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இல்லாவிடில் புதிய எதிரிகள் உருவாவர்.
குரு தன்னுடைய 7ஆம் பார்வையாக பன்னிரெண்டாம் இடத்தை பார்ப்பதால் சுபச் செலவுகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
குரு தன்னுடைய 9ஆம் பார்வையாக 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் கடனாக இருந்தாலும் யார் பணமாவது நம்மிடம் இருக்கும்.
கடக லக்கினத்திற்கு 9-க்குடையவர் ஆகவும் குரு வருவதால் சிலருக்குத் தந்தையின் உதவியும் அரவணைப்பும் கிடைக்கப்பெறும். ஆலய அறப்பணிகளை செய்து சுபச்செலவு ஆக மாற்றுவது நல்லது. தான தர்மம் பெரிய அளவில் செய்வது நல்லது.
சிலருக்கு ஆன்மீக யாத்திரை செல்லும் அமைப்பு உண்டாகும்.
அதிர்ஷ்டம்:
அதிர்ஷ்ட எண்கள்:9, 3, 6
அதிர்ஷ்ட கற்கள்:பவளம், மஞ்சள் புஷ்பராகம், வைரம்
நிறம் - வெள்ளை, சிவப்பு
கிழமை - திங்கள், வியாழன்
திசை - வடகிழக்கு
தெய்வம் - வெங்கடாசலபதி
பரிகாரம்:
கடக ராசியை ஆளும் கிரகம் சந்திரன். இந்த சந்திரனின் வலிமையை அதிகரிக்கும் கடவுள் கௌரி அம்மன். அமைதி மற்றும் இரக்கத்தின் உருவகமான கௌரி அம்மனை கடக ராசிக்காரர்கள் மிகுந்த பக்தியுடன் வணங்கினால், அனைத்து ஆசைகளும் நிறைவேறும்.

No comments:

Post a Comment