Breaking

Sunday, September 29, 2019

குருப்பெயர்ச்சி பலன்கள் 2019 - சிம்மம் ராசி

குருப்பெயர்ச்சி:
                             மங்களகரமான விகாரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தில் ஐப்பசி மாதம் 11ஆம் 28.10.2019 தேதி குருபகவான் விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
மங்களகரமான விகாரி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தில் ஐப்பசி மாதம் 18ஆம் 04.11.2019 தேதி குருபகவான்  விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.



சிம்ம ராசி பொதுப்பலன்:
இந்த ராசியில் பிறந்தவர்கள் தாராள மனப்பான்மையுடன் பெருந்தன்மையுடான குணம் உடையவர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் துடிப்புடனும் செயல்படுவார்கள். நல்ல பறந்த உள்ளம் உடையவர்கள். நல்ல இரக்க குணம் உடைய இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் விருப்பம் உடையவர்கள். தங்களை நம்பி வந்தவர்களை ஏமாற்றாத குணம் உடையவர்கள். எப்பொழுதும் தங்களை முன்னிலைப்படுத்தி செயல்படுவதில் ஆர்வம் உள்ளவர்கள். தனக்கு நிகர் யாருமில்லை என்ற எண்ணம் உடையவர்கள்.
தங்களது எண்ணம் ஆசைகள் நிறைவேற கடினமாக உழைக்கும் இவர்கள் யாரையும் எளிதில் நம்பிச் செயல்படுவார்கள். எல்லோரையும் ஒரே மாதிரி சீர்தூக்கும் எண்ணம் உடையவர்கள். இயல்பாகவே மற்றவர்களுக்கு உதவிபுரியும் இவர்கள் கொடைத்தன்மை மிக்கவர்கள். அதே சமயம் பொய் பேசுபவர்களையும் தர்மத்திற்கு எதிராகப் பேசுபவர்களையும் எதிர்த்து பெரிய அளவில் குரல் கொடுப்பார்கள். எப்பொழுதும் தலைமை ஏற்பதை மட்டுமே விரும்புவார்கள்.
இந்த சிம்ம ராசி ஒரு நிலையான ராசி என்பதால் இதில் பிறந்தவர்கள் மிகவும் பிடிவாத குணமும் அலட்சிய மனோபாவத்துடனும் நடந்து கொள்வார்கள். கடமை உணர்வு உள்ளவர்கள் அதே சமயம் மற்றவர்களை அரவணைத்துச் செலவதில் வல்லவர்கள். எந்த ஒரு காரியத்திலும் அரைமனதுடன் செயல்படாமல் முழுத்திருபதியுடனும் ஈடுபாட்டுடனும் செயல்படுவார்கள். இயல்பாகவே அதிகாரம் செய்து ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் உடையவர்கள்.
குருப்பெயர்ச்சி பலன்கள்:
2020ஆம் ஆண்டு மிக நல்ல பலனை அடையக்கூடிய ராசிகளில் முதலாவதாக இருப்பது சிம்மராசியே.
காரணம் ராசிக்கு பூர்வபுண்ணிய ஸ்தானம் எனப்படும் 5ஆம் இடத்தில் குரு ஆட்சி பெற்று அடுத்து ஒரு வருடத்திற்கு நற்பலன்களை தருகிறார்.
அடுத்த சில மாதங்களில் சனியும் ருண, ரோக, சத்ரு ஸ்தானம் எனப்படும் ஆறில் ஆட்சி பெற இருக்கிறார்.
அதுபோல் ராகுவும் ராசிக்கு பதினோராம் இடத்தில் அமர்ந்து குருவின் பார்வையைப் பெற இருக்கிறார்.
இதனால் பலன் மும்மடங்கு கிடைக்கும்.
சிம்ம ராசி நேயர்களே, இது வரை 4-ம் இடத்தில் இருந்து வந்த குரு பகவான் குருப்பெயர்ச்சிக்கு பிறகு  5-ம் இடத்திற்கு செல்கிறார். 5-ம் இடம் என்பது குருவிற்கு சிறப்பான ஒரு இடம். 5-மிடம் குருவால் இந்த வருடம் நிறைய நன்மைகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம். புத்தி கூர்மையுடன் எதையும் செய்வீர்கள். எதிர்காலம் தொடர்பான திட்டங்கள் மனதில் தோன்றும். எதையும் முன்னேற்பாட்டுடன் செய்வீர்கள். காரிய தடை நீங்கும். தொட்டதெல்லாம் துலங்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் வரும். மனதில் தோன்றும் புதுமையான எண்ணங்களை உடனுக்குடன் செயல்படுத்தி வெற்றி பெற முடியும். உங்கள் காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். அடிப்படை வசதிகள் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற எல்லா வகையான நன்மைகளும் கிடைக்கும். உடலிலும் மனதிலும் புது தெம்பு பிறக்கும். எங்கும் எப்போதும் உற்சாகமாக இருக்க முடியும். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். சிலருக்கு சொந்தமாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். புது வண்டி, வாகனம் வாங்க முடியும். திருமண காரியம் கைகூடும். சுப செலவுகள் கூடுதலாகும். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பழைய சொந்த பந்தங்கள் உங்களை தேடி வருவர். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். பண விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற மனக்குழப்பமும், சஞ்சலமும் உங்கள் மனதிற்கு சங்கடங்களை ஏற்படுத்தும். இறைவழிபட்டால் வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். புதிய சொத்து சேர்க்கையும் ஒரு சிலருக்கு அமையும். விலகிச் சென்ற உறவினர்களும் நண்பர்களும் மீண்டும் வந்து பேசுவார்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாக இருக்கவும். உத்யோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படும்.
குரு தனுசில் ஆட்சி பெற்று 9-ஆம் இடத்தையும், 11-ஆம் இடத்தையும், ராசியையும் பார்ப்பதால் இதுநாள் வரை இருந்த கவலைகள் பறந்தோடும்.
கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும் அல்லது கரைந்துவிடும்.
உங்கள் சுய ஜாதகத்தில் 5, 9 ஆம் அதிபதிகள் நல்ல நிலையில் இருந்து அதன் திசைகள் நடைமுறையில் இருந்தால் அல்லது ராகு யோகம் செய்யக்கூடிய நல்ல நிலையில் இருந்து மேற்கண்ட கோட்சார நிலைகள் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு நீடிப்பதால் அஷ்ட லட்சுமிகளும் வீட்டில் வாசம் புரியும்.
தொழில்:
தொழில், வியாபாரத்தில் நிறைய ஆலோசனை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் அடங்கும்.
சொந்தத் தொழில் தாராளமாக செய்யலாம்.
தொழிலில் லாபம் கூடும். எதிர்பார்த்த ஆர்டர்கள் ஒன்றுக்கு இரண்டாக கிடைக்கும்.
மாணவர்கள்:
மாணவர்கள் கல்வியில் மிகச் சிறப்பான மதிப்பெண் பெற்று தேறுவார்கள்.
அரசியல்வாதிகள்:
அரசியலில் இருப்பவர்களுக்கு தலைமைப்பதவி கைகூடும் .பிரமோஷன் எதிர்பார்க்கலாம். அரசாங்க தொடர்புகளும், அரசின் சலுகைகளும் அதிக அளவில் கிடைக்கப்பெறும்.
திருமணம்:
நீண்ட நாட்களாக குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்த திருமணமான தம்பதிகளுக்கு அழகான குழந்தை பிறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். திருமணம் கைகூடும்.
சூரியனின் ஆதிக்கத்தைப் பெற்ற சிம்மராசிக்காரர்கள் எதிலும் தனித்துவமானவர்கள். அவர்களுக்கு அடுத்த ஒரு வருட கோட்சாரம் மிக மிக அருமையாக இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும்.
ஆதிக்கம் செலுத்துபவன் இடத்தில் அதிகாரத்தை கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்பதை போல உங்களுக்கு அதிகாரமும், புகழும் ஒரு சேரக் கூடும் காலம் இது.
பதுங்கி இருந்த சிங்கம் பாய்வதற்கு நேரம் வந்துவிட்டது.
சிங்கமாய் சீரும் நேரமிது. பயன்படுத்தி கொள்ளுங்கள்.
சிம்ம ராசியை பற்றி எதிர்மறையாக சொல்ல எந்த ஒரு கிரக அமைப்பும் இல்லை அடுத்த ஒரு வருடத்திற்கு.
எந்த காரியத்தில் இறங்கினாலும்  தனித்து நின்று  முதல் இடத்தில் வெற்றி காண்பீர்கள்.
இந்த குருபெயர்ச்சியில் பல நன்மைகளும், எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்களும் ஏற்படும்.
அதிர்ஷ்டம்:
எண் : 1,2,3,9,
நிறம் : வெள்ளை, சிவப்பு
கிழமை : ஞாயிறு, திங்கள்
கல் : மாணிக்கம்
திசை : கிழக்கு
தெய்வம் : சிவன்
பரிகாரம்:
சிம்ம ராசியை ஆளும் கிரகம் சூரியன். சூரியனின் வலிமையை அதிகரிப்பதற்கு சிம்ம ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்க வேண்டும். எந்நேரமும் சிவனின் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு இருந்தால், வாழ்க்கையில் நல்ல நிலையை அடையலாம்.

No comments:

Post a Comment