Breaking

Sunday, September 29, 2019

குருப்பெயர்ச்சி பலன்கள் 2019 - கன்னி ராசி

குருப்பெயர்ச்சி:
                             மங்களகரமான விகாரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தில் ஐப்பசி மாதம் 11ஆம் 28.10.2019 தேதி குருபகவான் விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
மங்களகரமான விகாரி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தில் ஐப்பசி மாதம் 18ஆம் 04.11.2019 தேதி குருபகவான்  விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.



கன்னி ராசி பொதுப்பலன்:
இந்த ராசி ஒரு உபய ராசியாகும்  உபயம் என்றால் மாற்றம் என்று பொருள். மேலும் புதன் இந்த ராசியை ஆள்வதால் புதன் எப்பொழுதும் மாற்றத்தை அடிக்கடி விரும்புவர். இயற்கையிலேயே இவர்கள் நல்ல சுறுசுறுப்பு உடையவர்கள். புதன் என்றாலே சுறுசுறுப்பு அல்லது வேகம் என்று பொருள். மற்றவர்களிடம் அதிகப்பாசத்துடன் பழவதுபோல் ஓரளவு நடிப்பார்கள். அதே சமயம் மற்றவர்களிடத்தில் மரியாதையுடனும் கன்னியத்துடனும் நடந்து கொள்வர்.
எதையும் விரைந்து புரிந்து கொள்ளும் இயல்புடையவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் உள்வாங்கி அதனை வேகமாக செயலாற்றுவதில் எப்பொழுதும் ஆர்வமுடன் இருப்பர். மேலும் இந்த ராசிக்காரர்கள் கடமையுணர்ச்சி மிக்கவர்கள். எதையும் சரியாகத் தீர்மானித்து காரியத்தை நிறைவேற்றுவார்கள். மேலும் புதன் புத்திசாலித்தனத்திற்கும் வித்தைக்கும் கணிதத்திற்கும் அங்கம் வகிப்பதால் அதற்குத் தகுந்தாற்போல் திட்டமிடுவதில் மிகவும் வல்லவர்கள்.
குருப்பெயர்ச்சி பலன்கள்:
கன்னி ராசி நேயர்களே, இது வரை 3-ம் இடத்தில் இருந்து வந்த குருபகவான்    4-ம் இடத்திற்கு செல்கிறார்.
சனிபகவான் இதுநாள் வரை 4 ஆம் இடம் என்னும் சுக ஸ்தானத்தில் அமர்ந்து உடல் நலத்தை கெடுத்து தொழில் ஸ்தானத்தை பார்வை செய்வதால் வேலை மற்றும் தொழிலில் பல இடர்பாடுகள் ஏற்பட்டு கொண்டிருக்கும்.
தற்போது ராசிக்கு 4-ஆம் இடம் மற்றும் மூலத்திரிகோணம் ஆகிய தனுசாகிய ஆட்சி வீட்டில் குரு அமர்வதால் உடல் நலம் சீராகும்.
அர்தாஷ்டம சனி 4ஆம் இடத்தில்  இருக்கும் சனியுடன் குரு இணைவதால் சனியால் இனி பெரிய தீமையை தரமுடியாது.
குரு 4-ஆம் இடத்தில் அமர்வதால் உடல் நலம் சீராகும். நாலாம் இடத்தில் இருந்து பத்தாம் இடத்தைப் பார்ப்பதால் தொழிலில் இதுநாள்வரை இருந்த இடர்பாடுகள் நீங்கும்.
சிலருக்கு வீடு மனை வண்டி வாகனம் போன்ற யோகங்கள் அமையப்பெறும்
4-ம் இடத்தில் அமரும் குரு சுமாரான பலன்களை தான் தருவார் என்பதால் கெடுதல் ஏதும் சிம்ம ராசிக்கு இல்லை. 4-மிடம் குருவால் பெரிய நன்மைகள் ஏதும் இல்லாவிட்டாலும் பிரச்சனைகள் ஏதும் வராது. நெருக்கடியான பிரச்சனைகள் நீங்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை தீரும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிடையே நெருக்கும் அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். உடல் நலம் சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய நபர்களிடம் பழகும் போது எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் உங்கள் கை ஓங்கியே நிற்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயர்வடைய துவங்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் கூடும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. வீட்டில் சின்னச் சின்ன சண்டைகள் ஏற்படும். கடன் வாங்கவோ,கொடுக்கவோ வேண்டாம். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது அவசரப்படாமல் ஆலோசனை செய்து முடிவு செய்யவும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். தேவையற்ற விவகாரங்களில் தலையிட வேண்டாம். குடும்பத்தில் சுப காரியங்கள் சிறிது தாமதத்திற்கு பிறகு நல்ல படியாக நடைபெறும்.  சிலருக்கு வீடு மாறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். உத்யோகத்தில் இடம் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. உத்யோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிக்கவும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.
குரு இருக்கும் இடத்தை விட, பார்க்கும் இடம் சிறப்பு பெறும் என்பதால் குரு ஐந்தாம் பார்வையாக எட்டாம் இடத்தை பார்ப்பதால் இதுநாள் வரை இருந்த வம்பு வழக்குகள் நீங்கும். எதிர்மறையான எண்ணங்கள் விலகி புதிய உற்சாகம் பிறக்கும்.
எட்டாமிடம் மறைவு ஸ்தானம் என்பதால் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். சுய ஜாதகமும் நல்ல  அமைத்திருந்தால் வெளிநாடு ,வெளிமாநிலம் செல்ல முடியும்.
குரு 7ஆம் பார்வையாக 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் பணிச்சுமை குறையும். தொழிலில் சிலர் உதவ முன்வருவார்கள்.
குரு 9ஆம் பார்வையாக 12ஆம் இடத்தை பார்ப்பதால், விரைய செலவுகள் உண்டாகும் என்பதால் அதை சுப விரயமாக மாற்றிக்கொள்வது நல்லது.
ராசிக்கு ஏழாம் அதிபதி, ராசிக்கு 4ஆம் இடமான சுக ஸ்தானத்தில் அமர்வதால் திருமணப் பேச்சுகள் கைகூடும்.
4ஆம்  இடம் உயர்கல்வி என்பதால் உயர்கல்வி கற்கும் நிலையில் உள்ள மாணவர்களுக்கு எளிதில் உயர்நிலைக் கல்வி கிடைக்கும்.
அடுத்த சில மாதங்களில் சனிப்பெயர்ச்சிக்கு பிறகு அர்த்தாஷ்டம சனியும் விலக இருப்பதால் அளவில்லா ஆனந்தம் அடைய இருக்கிறீர்கள்.
பத்தில் ராகு பல தொழிலை கொடுக்கும்.
பத்தில் உள்ள ராகுவை குரு பார்ப்பதால் தொழில் கண்டிப்பாக இனி சிறக்கும்.
மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி விட முயற்சியின் பேரில் வெற்றி பெரும் வகையில் அமையும்.
அதிர்ஷ்டம்:
எண் - 4,5,6,7,8
நிறம் - பச்சை, நீலம்
கிழமை - புதன், சனி
கல் - மரகத பச்சை
திசை - வடக்கு
தெய்வம் - ஸ்ரீவிஷ்ணு
பரிகாரம்:
கன்னி ராசியை ஆளும் கிரகம் புதன் ஆகும். புதனின் சக்தியை கூட்டுவதற்கு, ஸ்ரீமன் நாராயணனை வணங்க வேண்டும். இதனால் அனைத்திலும் வெற்றிகள் மற்றும் வாழ்வில் அதிர்ஷ்டம் கொட்டும்.

No comments:

Post a Comment