Breaking

Sunday, September 29, 2019

குருப்பெயர்ச்சி பலன்கள் 2019 - துலாம் ராசி

வாக்கிய பஞ்சாங்கம்:
மங்களகரமான விகாரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில்
ஐப்பசி மாதம் 11ஆம் 28.10.2019 தேதி குருபகவான்  பிரதமை திதியில் கேதுவின் நட்சத்திரமான மூலம்
நட்சத்திரத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 03.14 மணிக்கு
விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
திருகணித பஞ்சாங்கம்:
மங்களகரமான விகாரி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின்
அடிப்படையில் ஐப்பசி மாதம் 18ம் 04.11.2019 தேதி குருபகவான் நவமி திதியில் கேதுவின்
நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில்  செவ்வாய்க்கிழமை
விடியற்காலை 05.17 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.



துலாம் ராசி பொதுப்பலன்:
நீதி தேவதையின் கையில் உள்ள தராசை இந்த ராசி குறிப்பிடுவதால் இந்த ராசியில் பிறந்தவர்கள் நீதி, நேர்மையுடன் நடந்து கொள்வர். தர்மநியாயத்திற்கும் கட்டுப்பட்டவர்கள், மனசாட்சிக்கும் தெய்வத்திற்கும் கட்டுபட்டவர்கள். எதையும் சீர்தூக்கிப் பார்த்து பகுத்தாய்ந்து நல்லது எது தீயது எது என ஆராய்ந்து முடிவு செய்வதில் வல்லவர்கள். ஒரு நல்ல தீர்ப்பு வழங்கும் நீதிமானாக இந்த ராசிக்காரர்கள் விளங்குவார்கள். எவ்வளவு விலை கொடுத்தாலும் விலை போகாது தர்மத்திற்கும் மனசாட்சிக்கும் தெய்வத்திற்கும் பயந்து வாழ்வார்கள்.
எப்பொழுதும் அமைதியை விரும்புவர். தனக்கு சரி எனப்பட்டதைச் சொல்வதிலும் பேசுவதிலும் எழுதுவதிலும் தனித்துவம் மிக்கவர்கள். யாரையும் அவ்வளவு எளிதில் நம்பி எந்த ஒரு காரியத்தையும் ஒப்படைக்கமாட்டார்கள். நல்ல ஆடை, ஆபரணங்களை அணிவதில் எப்பொழுதும் விருப்பமும் மகிழ்ச்சியும் உடையவர்கள்.
குருப்பெயர்ச்சி பலன்கள்:
துலாம் ராசி நேயர்களே, இது வரை 2-ம் இடத்தில் இருந்து வந்த குருபகவான் குருப்பெயர்ச்சிக்கு பிறகு  3-ம் இடத்திற்கு செல்கிறார்.
குருபகவான் மூன்றாமிடத்தில் மறைவது நல்லதல்ல.
தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். போராடி வெற்றிபெறும் அமைப்பைக் கொடுக்கும்.
பணம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டும்.
குரு 3-ம் இடத்திற்கு வருவது சிறப்பு இல்லை என்றாலும் குருவின் பார்வை பலமான இடங்களில் விழுவதால் நிச்சயமாக பெரிய நன்மைகளை எதிர்பார்க்கலாம். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தடைப்பட்ட காரியங்கள் தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். வாக்குவன்மையால் நன்மைகள் ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த காரியம் ஒன்று நடக்கும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் கூடும். உடல் ஆரோக்கியம் சீராகும். எதிர்பார்த்திருந்த உதவிகள் கடின முயற்சிக்கு பின்பே கிடைக்கும். வீண் அலைச்சலை குறைத்துக்கொண்டு வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது.  குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். அடுத்தவருக்கு வாக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. பண வரவு சற்று சுமாரான நிலையில் தான் இருக்கும் என்பதால் செலவுகளை குறைக்க வேண்டியது அவசியம். எதிர்பாராத விதமாக நிறைய அலைச்சல்களை சந்திக்க நேரிடும். உங்கள் முயற்சிகளில் ஒரு சில தடங்கல் ஏற்பட்டாலும் விட முயற்சியால் அதில் வெற்றி பெற முடியும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி கரமாக இருக்கும். பிரிந்து இருந்த தம்பதினர் மீண்டும் ஒன்று சேருவார்கள். வாழ்க்கைத்துணையோடு இணைந்து செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலையில் ஏற்பட்ட சரிவுகளில் இருந்து மீள முடியும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை அதிகரிக்கும். பணம் எவ்வளவு வந்தாலும் செலவுகளும் ஏற்படுவதால் பணப் பற்றாக்குறை நீடிக்கவே செய்யும். முக்கியமான விஷயங்களில் குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. குடும்ப விஷயத்தில் மற்றவர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். முக்கிய வேலைகளை நீங்களே நேரிடையாக செய்வது முடிப்பது நல்லது.
உத்யோகத்தில் நிர்வாக திறமை வெளிப்படும். உத்யோகத்தில் மேல் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
தொழில், வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெரும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.
குரு தனுசு வீட்டில் ஆட்சி பெற்று ஐந்தாம் பார்வையாக 7-ஆம் இடத்தையும், 7-ஆம் பார்வையாக 9-ஆம் இடத்தையும், ஒன்பதாம் பார்வையாக 11-ஆம் இடத்தையும் பார்ப்பார்.
குருவின் பார்வைக்கு பலம் அதிகம் என்பதால் பார்க்கும் இடங்கள் எல்லாம் வலுப்பெறும்.
ஐந்தாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தைப் பார்ப்பதால் திருமண முயற்சிகள் கைகூடும்.
கணவன் மனைவி உறவு வலுப்பெறும். கூட்டுத் தொழில் செய்வோர்களிடையே இருந்த பிரச்சனைகள் நீங்கும்.
ஆலய புனரமைப்பு, ஆன்மீக யாத்திரை செல்லும் வாய்ப்பு உண்டு.
லாப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அதே நேரத்தில் தொழிலை விரிவாக்க இந்த நேரம் உகந்தது அல்ல.
பண விஷயங்களிலும், வாடிக்கையாளர்களிடமும் பணிவுடன் நடந்து கொள்வது நல்லது.
மூன்றாம் இடத்தில் குரு ஆட்சி பெறுவதால் புதிய முயற்சிகள் உதிக்கும்.
எந்த ஒரு செயலிலும் முன்னெச்சரிக்கையாக துணிச்சலாக இறங்கும் மனப்பான்மை உண்டாகும்.
ஆறுக்குடையவன் ஆட்சி பெறுவதால் கடனை வாங்கி கடனை அடைக்க வேண்டாம். உடல்நலத்தில் எச்சரிக்கை தேவை.
ஆடம்பரச் செலவுகளுக்காக கடன் வாங்கி அவதிப்பட வேண்டாம்.
பொதுவாக பார்க்கும் போது குரு பெயர்ச்சி பலன் தரவில்லை என்றாலும் மற்ற கிரகநிலைகள் உங்களுக்கு சாதகமாக உள்ளதால் கவலை வேண்டாம்.
அதிர்ஷ்டம்:
எண் - 4,5,6,7,8
நிறம் - வெள்ளை, பச்சை
கிழமை - வெள்ளி, புதன்
திசை -தென் கிழக்கு
கல் -வைரம்
தெய்வம் - லக்ஷ்மி
பரிகாரம்:
துலாம் ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன். இந்த சுக்கிரனின் பலத்தை அதிகரிக்க லட்சுமி தேவியை வணங்க வேண்டும். இதனால் அவருக்கு அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் கொட்டும்.

No comments:

Post a Comment