Breaking

Monday, September 30, 2019

குருப்பெயர்ச்சி விருச்சிகம் ராசி பலன்கள் 2019-2020

குருப்பெயர்ச்சி:
                             மங்களகரமான விகாரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தில் ஐப்பசி மாதம் 11ஆம் (28.10.2019) தேதி குருபகவான் பிரதமை திதியில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் அதிகாலை 03.14 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
மங்களகரமான விகாரி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தில் ஐப்பசி மாதம் 18ஆம் (04.11.2019) தேதி குருபகவான் நவமி திதியில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் விடியற்காலை 05.17 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.



விருச்சிக ராசி பொதுப்பலன்:
பஞ்சபூத தத்துவங்களில் இந்த ராசி நீர்ராசியாக வருவதால் இந்த ராசியில் பிறந்தவர்கள் நல்ல அறிவும் சதா சிந்தித்துக் கொண்டும் நல்ல கற்பனை வளத்துடனும் விளங்குவார்கள். மேலும் இந்த ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாதலால் எப்பொழுதும் போராட்ட குணம் உடையவர்கள். செவ்வாய் போர்க்கிரகம் அதனால் எப்பொழுதும் போராடியே வாழ்வில் வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பார்கள்.
செவ்வாய் ஒரு பாபக்கிரகம் ஆகும்.  அதாவது ஒரு நெருப்புக் கிரகம் ஆகும். அதனால் இந்த ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களை தூக்கி எறிந்து பேசும் இயல்புடையவர்கள். இவர்களது பேச்சு மற்றவர்களை சங்கடப்படுத்தும் விதமாக அமையும். தாங்கள் எண்ணியதை நேரடியாகவும் சொல்வதிலும் பேசுவதிலும் வல்லவர்கள் மற்றவர்கள் மனம் புண்படுமே என்ற கவலை கொள்ளமாட்டார்கள். மனதிற்கு சரி என்று பட்டதை உடனே சொல்லும் இயல்புடையவர்கள்.  தேவையில்லாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடமாட்டார்கள்.
செவ்வாய் ஒரு போர்க்குணம் உள்ள கிரகம் அதனால் வாழ்க்கையில்  கடினமாக முயற்சி மேற்கொண்டு அதில் படிப்படியாக முன்னேற்றத்தையும் காண்பர்.
குருப்பெயர்ச்சி பலன்கள்:
விருச்சிக ராசி நேயர்களே, இது வரை உங்கள் ஜென்ம ராசியில் இருந்து வந்த குரு பகவான் குருப்பெயர்ச்சிக்கு பிறகு  2-ம் இடத்திற்கு செல்கிறார். 2-ம் இடம் இடத்தில் குரு பகவானின் செயல்பாடு மிகுந்த நற்பலனை தரும்.
இதுவரை  2011ஆண்டு இறுதியில் இருந்து இன்றுவரை ஏழரைச்சனி நடக்கின்றது. விருச்சிக ராசிக்கு சனியின் தண்டனை கடுமையாகவே இருந்திருக்கும்.
காரணம் விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய்.  செவ்வாய்க்கு சனி முழு பகைவர் ஆவார்.
இனிவர இருக்கும் குருபெயர்ச்சியால் முதல்தரமான யோகத்தை அனுபவிக்க இருக்கும் ராசியில் கண்டிப்பாக முதலிடத்தில் விருச்சிக ராசியே உள்ளது.
குருபகவான் 12 வருடத்திற்கு பிறகு குரு தன்னுடைய தனுசு வீட்டில் அமர உள்ளது மிகச் சிறப்பான பணப்புழக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
அடுத்து விருச்சிக ராசியினர்க்கு  2020 ஜனவரி மாதம் முதல் ஏழரைச் சனியும் முழுமையாக விலகுவதால் பல நற்பலன்கள் ஏற்படும்.
தனுசில் ஆட்சி பெற்ற குரு பகவான் 6, 8, 12-ஆம் இடத்தைப் பார்ப்பார்.
எட்டில் ராகு இருந்து எட்டாம் இடத்தை குரு பார்ப்பதால் வெளிநாட்டு வேலை  அமையும்.
இடம் மாற்றம், தொழில் மாற்றம் ஏற்பட்டால் தயக்கமின்றி தாராளமாக ஏற்றுக் கொள்ளுங்கள் அதனால் நன்மையே.
தொழில் ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால் தொழில் சிறப்படையும்.
குடும்ப ஸ்தானத்தில் குரு ஆட்சி பெறுவதால் திருமணம், குழந்தை பாக்கியம் அமைய வாய்ப்பு உண்டு.
நீண்ட காலமாக குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்து காத்து இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் அமையும்.
புதிய பதவியும், அதனால் சம்பள உயர்வும் கிடைக்கும். சக தொழிலாளர் உதவுவர்.
ஏழரை சனி காலத்தில் நல்ல வேலையில் இருந்தவருக்கு வேலை இழப்பு, தொழில் நட்டம் போன்ற கடுமையான எதிர்மறை அமைப்புகள் நடந்திருக்கும். வர இருக்கும் குருப்பெயர்ச்சி மற்றும் சனிப்பெயர்ச்சிக்கு பிறகு நல்ல வேலை அமையும் .தொழிலில் எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கவோ, முதலீடுகளை செய்யவோ ஏற்ற நேரம் இது.
அடுத்த ஒரு வருடம் காலத்தில் தடையில்லாத தன வரவு காரணமாக பொருளாதார நிலை உச்ச கட்டத்தை எட்டும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும்.  சின்ன விஷயங்கள் கூட மனநிறைவு தரும்படி நடக்கும்.மன தைரியம் அதிகரிக்கும். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவுகள் ஏற்படும். எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கை தரம் உயரும். புதிய நண்பர்கள் அறிமுகவார்கள். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும். பல புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வரும் பாக்கியம் கிட்டும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். பல வகையிலும் பிறர் உதவி கிடைக்க பெறுவீர்கள்.எல்லாவிதமான காரியங்களும் சாதகமான பலன் தரும். ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். திருமண வயதிலுள்ள அன்பர்களுக்கு நல்ல வரன் அமையக்கூடும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்துடன் உல்லாச பயணம் மேற்கொள்வீர்கள்.  குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிலவும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்புண்டு. வண்டி, வாகனத்தை சீர் செய்வீர்கள். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். புதிய ஆடை, ஆபர்ண பொருட்களை வாங்க முடியும். உத்யோகத்தில் தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும், முன்னேற்றம் உண்டாகும்.
இந்த குரு பெயர்ச்சி மூலம் எல்லாம் நன்மைகளையும் பெற முடியும் என்று உறுதியாக கூறலாம்.
அந்த நல்ல காலகட்டம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வந்துவிட்டது.
அதிர்ஷ்டம்:
எண் : 1,2,3,9,
நிறம் : ஆழ்சிவப்பு, மஞ்சள்
கிழமை : செவ்வாய், வியாழன்
திசை : தெற்கு
கல் : பவளம்
தெய்வம் : முருகன்
பரிகாரம்:
செவ்வாய் கிரகம் தான் விருச்சிக ராசியை ஆள்கிறது. எனவே இந்த ராசிக்காரர்கள் சிவன் மற்றும் முருகனை தொழுது வந்தால், செவ்வாய் கிரகத்தின் வலிமையை அதிகரிக்கலாம்.

No comments:

Post a Comment