Breaking

Monday, September 30, 2019

குருப்பெயர்ச்சி மகரம் ராசி பலன்கள் 2019-2020

குருப்பெயர்ச்சி:
                             மங்களகரமான விகாரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தில் ஐப்பசி மாதம் 11ஆம் (28.10.2019) தேதி குருபகவான் பிரதமை திதியில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் அதிகாலை 03.14 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
மங்களகரமான விகாரி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தில் ஐப்பசி மாதம் 18ஆம் (04.11.2019) தேதி குருபகவான் நவமி திதியில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் விடியற்காலை 05.17 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.



மகர ராசி பொதுப்பலன்:
சனியின் ஆதிக்கத்தில் பிறந்ததால் கௌரவம் உடையவர்களாகவோ சமுகத்தில் பெயர்,புகழ் உடையவராகவோ வாழ்வார்கள்.  இருந்தாலும் இது தியாகம் செய்யும் ராசி என்று பெயர் மற்றவர்களுக்காக உழைத்து உழைத்தே தேய்ந்து போகும் ராசியாகும். தன்னை அழித்து வெளிச்சம்தரும் மெமுகுவர்த்திபோல் இவர்கள் தங்களை ஒடாய் உழைத்து உருகி மற்றவர்களின் சந்தோஷத்திற்காக பாடுபடுவார்கள். இந்த ராசிக்காரர்கள் எப்பொமுதும் ஒருமுறைக்கு இருமுறை நன்கு சிந்தித்துச் செயல்படுவார்கள்.
மேலும் மகரம் ஒரு பெண்ராசியாகும் இந்த ராசியில் பிறந்தவர்கள் சற்று கூச்சம் சுபாவம் உடையவர்கள். மேலும் சனி என்றால் பயம் என்று பொருளும் உண்டு. எனவே சற்று பயந்த சுபாவம் உடையவர்கள். சனி சிக்கனத்திற்குரிய கிரகம் ஆதலால் இந்த ராசியில் பிறந்தவர்கள் ஒரளவுக்கு சிக்கனமாக செலவு செய்வார்கள்.கஷ்டப்பட்டே வாழ்வில் முன்னேறுவர். ஒவ்வொரு முன்னேற்றத்திலும் ஏகப்பட்ட தடைகள் ஏற்படும் அவைகளை எல்லாம் தகர்த்தறிந்து வாழ்வில் வெற்றிபெறப் போராடுபவர்கள்.இவர்களை யாராவது தூண்டிக் கொண்டேயிருந்தால் மட்டுமே மளமளவென காரியங்களில் இறங்கி வெற்றி பெற பாடுபடுவர்.சற்று பொய் பேசுவதில் வல்லவர்கள். இல்லாததை ஒன்றை இருப்பதாகக் கூறி அதை கற்பனையாகப் பேசுவதில் வல்லவர்கள்.நல்ல புத்திசாலிகளாகவும் நல்ல உயர்ந்த பண்பாடுடையவர்களாகவும் விளங்குவர்.
குருப்பெயர்ச்சி பலன்கள்:
மகர ராசி நேயர்களே, இது வரை 11-ம் வீட்டில் இருந்த குரு பகவான் குருப்பெயர்ச்சி்க்கு பிறகு 12ஆம் வீட்டிற்கு செல்கிறார். (12மிடம் மறைவு ஸ்தானம்) 12-ம் இடம் மறைவு ஸ்தானம் என்பதால் தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும். ஆகையால் அடுத்த ஒரு வருட காலம் கவனமாக இருப்பது நல்லது.
இதுநாள் வரை ஏழரை சனி நடக்கும் பொழுது லாப ஸ்தானமான 11-ஆம் இடத்தில் குரு இருந்தபோது கெட்டதிலும் ஒரு நல்லது என்பதைப்போல பணவரவை ஓரளவு வழங்கி இருப்பார்.
12 ராசிகளில் மிகவும் எச்சரிக்கையாக கவனமுடன் இருக்க வேண்டிய ராசி மகர ராசி என்றால் அதற்கு மாற்றுக் கருத்து இல்லை.
குரு மகர ராசிக்கு தற்போது 12 ஆம் இடத்தில் ஆட்சி பெறுவதால் பணம் விரயம் ஏற்படும். அதனால் விரையம் என்று ஆகிவிட்டது. அதை சுப விரயமாக மாற்றிக்கொள்ளுங்கள்.
வர இருக்கும் சனிப்பெயர்ச்சியில் உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்ம சனியும் நடக்க உள்ளதால் மிக மிக கவனமாக  எல்லாவற்றிலும் கவனமாக இருங்கள்.
புது விஷயங்கள் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். கோபமாக பேசுவதை தவிர்த்து நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். குடும்பத்தில் எதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம், அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். பண விஷயத்தில் கூடுமானவரை யாரையும் நம்ப வேண்டாம். குடும்ப பெரியோர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் உண்டாகலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். உறவினர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டிருக்கும்.
4-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் உடல் நிலை சீராக இருக்கும்.
இந்த நிலைமையும் மாறும் என்பதை போல மாணவர்கள் தங்கள் லட்சியத்தை நோக்கி மட்டுமே பயணப்பட வேண்டும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவர். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். நல்லபடியாக அனைத்து விஷயங்களையும் முடித்து கொடுப்பீர்கள். பண வரவுக்கு பஞ்சமில்லை அதே போல சுப விரைய செலவுகளும் அதிகம் ஏற்படும். ஆன்மீக சார்ந்த விஷயங்களுக்கு அதிகம் செலவு செய்ய நேரிடும். நீண்டதொரு ஆன்மீக பயணம் ஏற்படும்.  பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாறுவீர்கள். புது வண்டி, வாகனம் வாங்கும் யோகம் கைகூடி வரும். எதிர்பார்த்த காரியம் தடையின்றி முடியும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை கூடும்.ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை சேர்த்து பார்க்க வேண்டி வரும். உத்யோகத்தில் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். கூட்டு தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை.
குருபகவான்  12-ம் இடத்தில் இருந்து ஆறாம் இடத்தைப் பார்ப்பதால் சுப கடன்களை நம் வருமானத்திற்கு ஏற்ப,  அளவோடு கடன் வாங்கிக்கொள்ளுங்கள். அகல கால் வைத்தால் கடனை அடைப்பது சிரமமாகிவிடும்.
மகர ராசிக்கு அடுத்த சில வருடங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாகவே உள்ளது.
சுய ஜாதகம் மற்ற கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தால் பயப்படத் தேவையில்லை.
அதிர்ஷ்டம்:
எண் : 8,5,6,
கிழமை : சனி, புதன்
திசை : மேற்கு
நிறம் : நீலம், பச்சை
கல் : நீலக்கல்
தெய்வம் : ஐயப்பன்
பரிகாரம்:
மகர ராசியை ஆளும் கிரகம் சனி. இந்த கிரகத்தின் வலிமையை சிவபெருமான் அதிகரிப்பார். ஆகவே மகர ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்கினால் அனைத்து வளங்களையும் பெறலாம்.

No comments:

Post a Comment