Breaking

Saturday, September 28, 2019

குருப்பெயர்ச்சி பலன்கள் 2019- மேஷம் ராசி

குருப்பெயர்ச்சி:
                              மங்களகரமான விகாரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தில் ஐப்பசி மாதம் 11ஆம் (28.10.2019) தேதி குருபகவான் பிரதமை திதியில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் அதிகாலை 03.14 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
மங்களகரமான விகாரி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தில் ஐப்பசி மாதம் 18ஆம் (04.11.2019) தேதி குருபகவான் நவமி திதியில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் விடியற்காலை 05.17 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

மேஷ ராசி பொதுப்பலன்:
                                                      மேஷ ராசி என்பது மேடான ராசி என்றும், இந்த ராசியில் பிறந்தவர்கள் மேன்மையான அந்தஸ்துடன், கீர்த்தி செல்வாக்கு,சுகம் இவைகளைப் பெற்றிருப்பார்கள். என்று பொதுவாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது.பாசத்தோடு பழகி, பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கையை கூட்டிக் கொள்ளும் மேஷ ராசி நேயர்களே!
குருபகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்திலிருந்து ஒன்பதாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.

மேஷ ராசி குருப்பெயர்ச்சி
 பலன்கள்:

இதுநாள் வரை எட்டாம் இடத்தில் அஷ்டம குருவாக மிகவும் கஷ்டப் படுத்தியவர் இனி 9-ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு வருவதால் மிகச் சிறப்பான நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
தொழில் மாற்றம், இடமாற்றம் ஏற்பட்டால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
இதுநாள் வரை  பணத்திற்கு அதிபதியான குரு பகவான் எட்டாம் இடத்தில் மறைந்து இருந்ததால் மேஷ ராசிக்காரர்கள் பலபேருக்கு பணப்பிரச்சனை இருந்திருக்கும்.
பணத்தின் அருமையை நாம் எல்லோரும் உணர்வோம்.
குரு தனுசு ராசியில் இருந்து மேஷ ராசி, மிதுன ராசி, சிம்ம ராசியை பார்ப்பதால் அஷ்டம சனி, அட்டம குரு காலகட்டங்களில் இருந்த எதிர்மறையான எண்ணங்கள் விலகி, முழு மனதுடன் நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுவீர்கள்.
செய்யும் முயற்சிக்கேற்ற பலன் திருப்பி நிச்சயம் உண்டு. பண வரவு அதிகரிக்கும்.
ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு என்பது பழமொழி
மேஷ ராசிக்கு ஒன்பதில் குரு ஆட்சி பெறுவதால் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் அடிக்கடி புனித யாத்திரை செல்லும் வாய்ப்பு அமையும்.
பூர்வீக சொத்துக்கள் கிடைக்கப்பெறும்.
புண்ணியங்கள் பல செய்யும் வாய்ப்பு உண்டாகும். தான தர்மங்களுக்கு தாராளமாகக் கொடுத்து உதவக்கூடிய அமைப்பில் பணவரவு இருக்கும்.
ராசியை குரு பார்ப்பதால் தெளிவான, சிறப்பான மனநிலை அமையும்.
ஒன்பதாம் இடத்தில் இருக்கும் குருபகவானால் பெயர், புகழ், செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படக்கூடிய காலமாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்கள் வீட்டு கதவை தட்டப்போகிறது. பெண்களுக்கு புத்திர பாக்கியம் கைகூடும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சங்கடங்கள் விலகி நன்மைகள் பெருகும். தந்தையின் அன்பும், அரவணைப்பும் அதிகரிக்கும். ஆன்மிக சுற்றுலா செல்ல வாய்ப்புகள் அமையும். குலதெய்வ கோவில் திருப்பணிகளில் முன்னின்று நடத்தும் பொறுப்புகள் வந்து சேரும். வெளிநாட்டில் வேலை தேடுவோருக்கு வேலைவாய்ப்புகள் அமையும். ஆன்மிகத்தில் உள்ளவர்கள் பெயரும், புகழும் அடைவார்கள்.
பெயர்ச்சியாகும் குரு பகவான் உங்களுக்கு பல ஏற்றங்களை வழங்க போகிறார். உங்கள் ராசியை குரு பார்ப்பதால் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். ஒரு சில காரியங்களில் அவசரமாக செயல்பட தோன்றும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது வெற்றிக்கு வழி வகுக்கும். சிக்கலான பிரச்சனைகளில் சுமுகமான தீர்வு காண முடியும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. உடல் சோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல் பட முடியும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். குல தெய்வ வழிபாடு குலத்தை காக்கும். தெய்வத்தின் அருளால் எல்லா காரியத்திலும் எளிதில் வெற்றி பெற கிடைக்கும். குடும்ப வருமானம் தானாக உயரும். குடும்பத்தில் குதூகலம் உண்டு. குடும்பத்தாரின் அரவணைப்பை பெற முடியும். விலகி நின்ற சொந்தங்கள் மீண்டும் வந்து இணைவர். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட திருமணம் உறவினர்களின் ஒத்துழைப்பால் கைகூடி வரும். கையில் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். குடும்பத்தில் உங்கள் யோசனைகள் ஏற்கப்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாற்றங்கள் ஏற்றங்களை தரும். உங்களுக்கு முன்னேற்றமும் வளர்ச்சியும் யோகமும் வந்து சேரும். உங்கள் ஆற்றலையும், திறமையும் கண்டு மற்றவர்கள் வியப்படைவர். உறவினர்கள் சிலர் உங்களிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பர். தைரியமாக எல்லா காரியங்களிலும் இறங்கி வெற்றி பெறலாம். தைரியத்தையும், தன்னம்பிக்கை தந்து வளமான வாழ்வு உண்டு. சொந்த வீடு கனவு நினைவாகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கணவன் மனைவிக்கிடையில் அன்யோன்யம் ஏற்படும். நண்பர்களிடம் ஏற்பட்ட விரோதம் மறையும். குடும்ப பெரியோர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். பெயர், புகழ் கிடைக்கும். தொழில், வியாபாரம் நிதானமாக நடக்கும். இந்த குரு பெயர்ச்சியில் பாக்கிய ஸ்தானத்திற்கு வரும் குருவால் அபரிதமான பலன்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

உத்தியோகஸ்தரர்களுக்கு :

விரும்பிய இடங்களில் பணி இடமாற்றம் கிடைக்கும். இதுவரை மேலதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து தங்களின் திறமை வெளிப்படும். முயற்சிக்கேற்ற பதவி உயர்வை பெறுவீர்கள்.

வியாபாரிகளுக்கு :

தொழிலில் மேன்மை உண்டாகும். தொழிலில் செல்வநிலை சிறப்படையும். வியாபாரம் சார்ந்த புதிய முயற்சிகள் அனைத்தும் கைகூடும்.

மாணவர்களுக்கு :

உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். வேலைக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கைகூடும்.

பெண்களுக்கு :

விரும்பிய இடத்தில் திருமணம் அமையும்.

விவசாயிகளுக்கு :

இந்த வருடத்தில் அமோகமான விளைச்சல் கிடைக்கும். நீர்வளம் சிறப்பாக அமையும்.  சொத்து விரிவாக்க முயற்சி கைகூடும்.

அரசியல்வாதிகளுக்கு :

                                     தலைமைப் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கு இந்த காலம் வெற்றியை தரும். உங்களின் திறமை வெளிப்பட தகுந்த காலம் இது.

கலைஞர்களுக்கு ;

புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு புதிய சாதனைகளை படைப்பீர்கள். பொருளாதார நிலை உயரும்.

அதிர்ஷ்டம்:

 எண் : 1,2,3,9,

 நிறம் : ஆழ்சிவப்பு

 கிழமை : செவ்வாய்

 கல் : பவளம்

 திசை : தெற்கு

 தெய்வம் : முருகன்

பரிகாரம் :

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால் ,செவ்வாயின் அதிபதி முருகன் என்பதால்  எப்போதும் உங்கள் உள்ளத்தில் பழநி, திருச்செந்தூர்  முருகனை நிறுத்துங்கள். மேஷ ராசிக்காரர்கள் இந்தத் தலத்துக்கு எப்போது சென்று வந்தாலும் ஒரு மாற்றமும் ஏற்றமும் நிச்சயம் உண்டு.சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வர அனைத்து விதமான நற்பலன்களும் ஏற்படும்.

No comments:

Post a Comment