Breaking

Friday, March 24, 2017

Thirukkaravasal temple -திருக்கரவாசல் கண்ணாயிரநாதர் திருக்கோயில்

       



                     மூலவர்:கண்ணாயிரநாதர்
உற்சவர்:-
அம்மன்/தாயார்: கைலாச நாயகி
தல விருட்சம்: பலா மரம்
தீர்த்தம்:பிரம்ம தீர்த்தம், சேஷ தீர்த்தம்
ஆகமம்/பூஜை:-
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருக்காறாயில், திருக்காறைவாசல்
ஊர்:திருக்காரவாசல்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்: தமிழ்நாடு
பாடியவர்கள்:
அப்பர், சம்பந்தர்
தேவாரப்பதிகம்
தாயானே தந்தையு மாகிய தன்மைகள் ஆயானே யாயநல் லன்பர்க்கு அணியானே சேயானே சீர்திகழும் திருக் காறாயில் மேயானே என்பவர் மேல்வினை மேவாவே.
-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 119வது தலம்.
திருவிழா:
வைகாசி விசாகத்தன்று பிரமோற்சவம் கொண்டாடப்படுகிறது.
தல சிறப்பு:
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 183 வது தேவாரத்தலம் ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கைலாச நாயகி சமேத கண்ணாயிரநாதர் திருக்கோயில், திருக்காரவாசல் (திருக்காறாயில்) - 610 202. திருவாரூர் மாவட்டம்
   
             தல வரலாறு:
"டங்கம்' என்றால் "கல் சிற்பியின் சிற்றுளி' என்று அர்த்தம். "விடங்கம்' என்றால் "சிற்பியின் உளி இல்லாமல்' என்று பொருள்.  "சிற்றுளி கொண்டு செதுக்கப்படாமல்' தானே உருவான இயற்கை வடிவங்களை "சுயம்பு' அல்லது "விடங்கம்' என்று குறிப்பிடுவார்கள். அப்படி உளி இல்லாமல் உருவான 7 லிங்கங்கள் சப்தவிடத்தலங்கள் எனப்பட்டன.
ஒரு சமயம் இந்திரன், அசுரர்களால் தனக்கு ஏற்பட இருந்த பெரிய ஆபத்தினை முசுகுந்த சக்கரவர்த்தியின் உதவியால் போர் செய்து அசுரர்களை வென்றார். வெற்றிக்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் என்ன வேண்டும்? என இந்திரன் கேட்க,""தாங்கள் பூஜை செய்து வரும் "விடங்க லிங்கத்தை' பரிசாக தாருங்கள்'' என முசுகுந்தன் கேட்டார். ஆனால் இந்திரனுக்கோ அந்த லிங்கத்தை தர மனதில்லை. தேவசிற்பியான மயனை வரவழைத்து தான் வைத்திருப்பதைப்போலவே 6 லிங்கங்களை செய்து அவற்றை தர நினைக்கிறான். ஆனால் முசுகுந்தன் "செங்கழுநீர் பூவின் வாசம் உடைய' உண்மையான சிவலிங்கத்தை தன் ஆத்ம சக்தியால் கண்டுபிடிக்கிறார்.
இது இறைவனின் திருவிளையாடல் என்பதை உணர்ந்த இந்திரன் தன்னிடமிருந்த உண்மையான சிவலிங்கத்துடன் பிற லிங்கங்களையும் முசுகுந்தனுக்கு பரிசாக தந்து விடுகிறார். ஏழு லிங்கங்களையும் ஏழு இடங்களில் பிரதிஷ்டை செய்து முசுகுந்தன் பூஜை செய்தார். இவை சப்தவிடத்தலங்கள் எனப்பட்டன. அவை திருவாரூரில் "வீதி விடங்கர்', திருநள்ளாறில் "நகர விடங்கர்', நாகப்பட்டினத்தில் "சுந்தர விடங்கள்', திருக்குவளையில் "அவனி விடங்கர்', திருவாய்மூரில் "நீலவிடங்கர்', வேதாரண்யத்தில் "புவனி விடங்கர்', திருக்காரவாசலில் "ஆதி விடங்கர்' என அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் சிவபெருமான் "குக்குட நடனம்' ஆடி தரிசனம் தருகிறார்.
மகாவிஷ்ணு, மகாலட்சுமி, இந்திரன், கபால முனிவர், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர் ஆகியோர் இங்கு தரிசனம் செய்துள்ளனர். இங்குள்ள தெட்சிணாமூர்த்தி "ஞான தெட்சிணாமூர்த்தியாக' அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் அருள்பாலிக்கும் சொர்ணாகர்ஷண கால பைரவரை வழிபாடு செய்தால் இழந்த பொருள்களை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம். புராண காலத்தில் இத்தலம் முழுவதும் காரகில் எனும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்தது. எனவே திருக்காரகில் என வழங்கப்பட்டு அதுவே "திருக்காரவாசல்' என பெயர் மருவியது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு திருமேனி மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்
         தலபெருமை:
பிரம்ம தீர்த்தம், சேஷ தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள் இங்குள்ளன. பிரம்மன் தனக்கு ஏற்பட்ட சாபவிமோசனம் நீங்க இங்கு ஒரு குளம் உண்டாக்கி, ஈசனை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றதால் பிரம்ம தீர்த்தம் என பெயர் ஏற்பட்டது. அதேபோல் ஆதிசேஷன் இங்குள்ள கிணற்றின் வழியாக கோயிலுக்குள் சென்று இறைவனை வழிபட்டதால், சேஷ தீர்த்தம் உண்டானது. இந்த தீர்த்தங்களில் நீராடி சிவபெருமானை வழிபாடு செய்தால் பாவங்களும், சாபங்களும் விலகும் என்பது நம்பிக்கை. கண் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் இங்கு தரும் முக்கூட்டு மூலிகையை தேய்த்து தீர்த்தத்தில் நீராடி, பிரசாதமாக தரும் தேனில் ஊற வைத்த அத்திப்பழத்தை பிரசாதமாக பெற்று சாப்பிட்டு வந்தால் நோய் விரைவில் குணமாகும் என்பதும், தோல் சம்பந்தப்பட நோய் உள்ளவர்கள் பவுர்ணமி நாட்களில் தரப்படும் சேஷ தீர்த்தத்தை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும் என்பதும் நம்பிக்கை.
பிரமோத விநாயகர் பிரமோதம் என்றால் பெருமகிழ்ச்சி என்று பொருள். இத்தலத்தின் மேற்கு பிரகாரத்தில் அருள்பாலிக்கும் விநாயகரை  வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நிறைவேறி பெருமகிழ்ச்சி உண்டாகும் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது.
கடுக்காய் விநாயகர்:பிரம்ம தீர்த்தத்தின் கரையில் அருள்பாலிக்கும் விநாயகர் கடுக்காய் விநாயகர் எனப்படுகிறார். ஒரு முறை வணிகன் ஒருவன் வண்டி நிறைய ஜாதிக்காய்களை ஏற்றிக்கொண்டு வந்து இரவில் இத்தலத்தில் தங்கினான். அப்போது விநாயகர் சிறுவன் வடிவில் வந்து மூட்டைக்குள் இருப்பது என்னவென்று கேட்க, மூட்டைக்குள் இருப்பது ஜாதிக்ககாய் என்று சொன்னால் நிறைய வரிகட்ட வேண்டி வரும் என பயந்து, இவையனைத்தும் "கடுக்காய்' என பொய் கூறினான். அதன்படியே ஜாதிக்காய் அனைத்தும் கடுக்காய்களாக மாறின. சிறுவனாக வந்திருப்பது விநாயகர் என்பதை அறிந்த வணிகன் விநாயகரிடம் மன்னிப்பு கேட்க அவை மீண்டும் ஜாதிக்காய்களாக மாறின. அன்றிலிருந்து இவர் "கடுக்காய் விநாயகர்' என அழைக்கப்படுகிறார்.
சிறப்பு வழிபாடு: தமிழ் மாதப்பிறப்பு, தியாகராசர் அபிஷேகம், நடராஜர் அபிஷேகம், பிரதோஷம், சங்கடகர சதுர்த்தி, வியாழன் குரு வழிபாடு, கார்த்திகையில் முருகன் வழிபாடு, காலாஷ்டமி பைரவர் பூஜை, அமாவாசை, பவுர்ணமி ஆகியவை இங்கு சிறப்பு வழிபாடாகும்.
         
         பொது தகவல்:


கிழக்கு நோக்கிய கோயில். வலப்பால் கோயில் அலுவலகமுள்ளது. ராஜகோபுரமில்லா. கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், சற்று உயரத்தில் நந்தி உள்ளது. உள்கோபுரம் மூன்று நிலைகளையுடையது. வாயிலைத்தாண்டி உட்சென்று வலமாக வரும்போது, தலப்பதிகக் கல்வெட்டு, சுந்தரர் (உற்சவர்) சன்னதி, தியாகராஜசபை, விநாயகர் பல சிவலிங்கத் திருமேனிகள், மகாவிஷ்ணு, ஆறுமுகசுவாமி, சரஸ்வதி, கஜலட்சுமி, பைரவர் முதலான சன்னதிகள் உள்ளன.



பிரார்த்தனை


சேஷ தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை வழிபாடு செய்தால் பாவங்களும், சாபங்களும் விலகும் என்பது நம்பிக்கை. கண் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் இங்கு தரும் முக்கூட்டு மூலிகையை தேய்த்து தீர்த்தத்தில் நீராடி, பிரசாதமாக தரும் தேனில் ஊற வைத்த அத்திப்பழத்தை பிரசாதமாக பெற்று சாப்பிட்டு வந்தால் நோய் விரைவில் குணமாகும் என்பதும், தோல் சம்பந்தப்பட நோய் உள்ளவர்கள் பவுர்ணமி நாட்களில் தரப்படும் சேஷ தீர்த்தத்தை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும் என்பதும் நம்பிக்கை.


நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

No comments:

Post a Comment